நீ மட்டும்......

முதல் நண்பனாய்,
கடைசி எதிரியாய்...

கனவினில் காதலனாய்,
கண்களுக்குள் வாழ்பவனாய்....

உயிரினுள் கலந்தவனாய்,
நொடியினில் உயிரை எடுப்பவனாய்...

ஊடலில் உயிர்ப்பவனாய்,
உலகம் மறக்கச் செய்பவனாய்....

என்னால் சிரிப்பவனாய்,
எனக்காக அழுபவனாய்...

எப்போதும் காவலனாய்,
எப்போதாவது கள்வனாய்...

பூவைத் தொடுப்பவனாய்,
புயலாய் கலைபவனாய்...

முத்தத்தில் மூழ்கடிப்பவனாய்,
கோபத்தில் மூர்க்கனாய்...

பிறந்தவுடன் வரவேற்கும் தாயாய்,
இறந்தவுடன் வழியனுப்பும் வெட்டியானாய்...

நீ வேண்டும்...
எனக்கு நீ மட்டும் வேண்டும்...

எழுதியவர் : தீ (18-Mar-13, 9:24 am)
பார்வை : 157

மேலே