பொறுமையிழந்து பொங்கியெழுந்த தீ !

மாணவர்களின் போராட்டத் தீ !
யாராலும் பற்றிப் பரவியதல்ல.
தானாகே பற்றிக்கொண்ட
உணர்வுத் தீ அது !
.
உணர்ச்சியின் உரசல்கள் பீச்சிய
தீப்பொறி களால் பற்றிய தீ அது.
பற்றவைக்கப்பட்டதல்ல
பற்றிக்கொண்ட தீ அது !.

காட்டுத் தீயுங்கட்டுப்படும்.
காற்றுத் தீ யாருக்குக் கட்டுப்படும்!
இரத்தங் கொதித்த வெப்பக்காற்றால்
விளைந்த தீ அது !..

யாராலும் அணைக்க இயலாத தீ !
எவராலும் அடக்கவும் முடியாத தீ !
பொறுமையிழந்து பொங்கியெழுந்த தீ !
வறுமைக்கும் வாடாத வளருந் தீ !

பரவட்டும் தீ !
வெப்பம் வெந்து கொலைகாரன்
ஒப்புக்கொள்ளும்வரை
பரவட்டும் தீ !

ஒப்புக்குச்சப்பான அமெரிகாத்தீர்மானம்
திருத்தப்ப்படும்வரை பரவட்டும் தீ !

எழுதியவர் : கவிஞர்.கொ.பெ.பிச்சையா.. (22-Mar-13, 8:42 am)
சேர்த்தது : கொ.பெ.பி.அய்யா.
பார்வை : 118

மேலே