திருமண வாழ்த்து மடல்!

1996-ல் பெங்களூரில் இருந்து திருச்சியில் நடந்த அண்ணனின் திருமணத்திற்கு கடிதம் மூலம் அனுப்பிய திருமண வாழ்த்து மடல்!

அண்ணா!
அமைதியை கைப்பிடிக்கும் கண்ணா!

நீலவான் தோட்டத்தில்
பயிரிடப்பட்டிருக்கும் நட்சத்திரத்தையோ
அழகுமங்கை வானவில்லின்
ஏழுவகை நகைகளையோ
பூக்களுக்கு சொந்தமான
நறுமண புன்னகையையோ
தென்றலினில் ஏறிவரும்
மென்மையெனும் சுகத்தையோ
என்னால் முடிந்தால்
அனுப்பியிருப்பேன்!

வாழ்த்து எனும் மலரெடுத்து
அதை தொடுத்து அனுப்பியுள்ளேன்!

திருமணமெனும்
நறுமணத்தை
இருமனமும் கலந்து
ஒருமனமாய் நுகர வாழ்த்துகிறேன்!

தினமும்
அன்பு பாசம் சூடிக்கொண்டு
ஆசை நேசம் பகிர்ந்துகொண்டு
மகிழ்ச்சி படகில் அமர்ந்துகொண்டு
உலக கடலில் தடைகளின்றி
கடவுள் தன்னை முதல்நிறுத்தி
உயர்ந்து வாழ வாழ்த்துகிறேன்!

இனியராகம் பாடட்டும்!
புதிய தென்றல் வீசட்டும்!
குயிலது கூவட்டும்!
வெண்புறா பறக்கட்டும்!

என வாழ்த்தும்
இதை எட்டும்
நீங்கள் மட்டும்
இதய ஏட்டில்
என் பெயர் எழுதிக்கொள்ளவும்!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (4-Apr-13, 8:14 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 788

மேலே