உயிர்த்தெழும் பறவை

புதிதாய்ச் சொல்வதற்கு
ஏதுமில்லை என்னிடம்
சேதிகளற்ற செய்தித்தாளைப் போல
வெற்று விளம்பரங்கள் தாங்கி வரும்
என் கவிதையை...
அடுப்பங்கரைத் தீயிலிடும்
உங்களில் ஒருத்தி
உகுக்கும் ஒரு துளி
கண்ணீரில் மீண்டும் மீண்டும்
உயிர்த்தெழும் எனது கவிதை
சாம்பலில் இருந்து...!

எழுதியவர் : வெள்ளூர் ராஜா (12-Apr-13, 2:36 pm)
பார்வை : 168

மேலே