தெய்வீகம்

தெய்வீகம் நிறைந்திருந்தால்
திறம்பட செயல் படுவேன்
தினமும் நான் செயும் செயலில்
தரம் தர முயன்றிடுவேன்

துயரங்கள் வரும் போது
துவண்டிட மறந்திடுவேன்
உயரங்கள் தொடும் போது
உள்ளடக்கம் பழகிடுவேன்

ஆசைக்கோர் அளவிட்டு
ஆர்ப்பரிக்கக் கற்றிடுவேன்
அடுத்தவர்க்கு உதவி செய்யும்
ஆவலை நான் பெற்றிடுவேன்

கோபத்தை தொலைத்து விட்டு
கொடி கட்டிப் பறந்திடுவேன்
பாவத்தை தரும் செயலை
பழக்கத்தில் துறந்திடுவேன்

கடமையே முதல் என்று
களத்தில் நான் குதித்திடுவேன்
நாமெல்லாம் கடவுளென்ற
கருத்தை நான் பதித்திடுவேன்

தெய்வீகம் கோவில்களில்
தெளிவு ஆவதில்லை
தெளிந்த ஒரு மனத்தில் அது
அழிவு ஆனதில்லை

எழுதியவர் : நா.குமார் (15-Apr-13, 2:28 am)
சேர்த்தது : kavikumar09
பார்வை : 134

மேலே