வலி,,,

நீ ஒரு திசை
நான் ஒரு திசை
பிரிந்து போனாலும்
ஏதோ ஒரு நாள்
ஏதோ ஒரு நிமிடம்
ஏதோ ஒரு நிகழ்வு
ஏதோ ஒரு உணர்வு
உன்னை எனக்கும்
என்னை உனக்கும்
நினைவு படுத்திதான் செல்கிரதடி

அந்த பூர்வீகா
மொபைல் ஷாப் அருகே
உன்னை பூர்வீகமாய் கண்டபோது
பூரித்துதன் போனேன்
ஏதோ ஒரு வலி
எதோ ஒரு ஏக்கம்
சொல்ல முடியாத தவிப்பு
அருகே நெருங்க முடியாத அளவுக்கு
உன் கழுத்திலே ஒரு வேலி
மஞ்சள் குங்குமத்தோடு உன் தாழி

அந்த கோலத்தில் உன்னை கண்ட போது
நா மடங்கி வாயோடு ஒட்டிக்கொண்டது
இதயத்தில் ஈட்டி பாய்ந்த வலி
ஒருவித நடுக்கம்
படபடப்பு,
வியர்த்து உடம்பெல்லாம் ஆராய் ஓடிய
வியர்வை நதிகள்,

ரோட்டோரம் வாகனங்களின்
இரைச்சல் சப்தமும் வாகனங்களின் ஒலிபெருக்கியின் அலறல் சப்தமும்
ஒரு காதலின் தோல்வியை உணர்திவிட்டதை
கண்களில் பொங்கிய கண்ணீர் துளிகள்
காட்டி கொடுத்ததை எப்படி புரிய வைப்பேன்,

ஏமாற்றத்தின் உச்சியில் சென்ற
மன வேதனையில் உன்னை
கொன்றுவிட என் ரத்தம் சூடேறினாலும்
நான் உன்மேல் வைத்திருந்த காதல்
என்னை தடுக்கிரதடி
காலத்தால் அழிக்க முடியாத காதலால்
நான் மட்டும் உன் நினைவுகளை சுமந்து
அழிந்து போகிறேன்

நீ எங்கிருந்தாலும் வாழ்க,,,

எழுதியவர் : நந்திசெல்வா (15-Apr-13, 5:31 pm)
சேர்த்தது : nanthiselva
பார்வை : 160

மேலே