தப்பே இல்லாத ஒரு இனிப்பு நம் நட்பு

உயிரிலும் மேலான
உண்மையிலும்
உயர்வான
தன்மையிலும்
இனிமையான
கனி போல ,,,,,,
காலத்தில் ஓடும்
படகு நட்பு ,,,,,

கருவிலும் கருவறையில் நட்பு ,,
பிறப்பிலும் தாயிலும் நட்பு
உருண்டு உலாவும் போது
உறவிலும் நட்பு ,,,,,
தவழ்ந்து தள்ளாடும் போது
தாத்தாவுடன் நட்பு ,,,,,,
கை கோர்த்து கால் நடக்க
கரம் கோர்க்கும்
தந்தையுடனும் நட்பு ,,,,,,
பாலர் பாடசாலையிலும்
நட்பு ,,,,
பள்ளியிலும் நட்பு ,,,,,,
கல்லூரியிலும் நட்பு ,,,,,,
கல்லறை போகும் போதும் நட்பு ,,,,,
தப்பே இல்லாத
ஒரு இனிப்பு நம் நட்பு ,,,,,,,,,,,,,,
கவிஞர்:
வி.விசயராஜா {மட்டு நகர் இளையதாரகை }

எழுதியவர் : கவிஞர்: வி.விசயராஜா {மட்டு (19-May-13, 12:37 am)
பார்வை : 305

மேலே