தோழியே பதில் சொல் ????

ஒவ்வொரு விடியலும்
ஏமாற்றி கொண்டேயிருக்கிறது
உன்னை என்னிடம்
காட்டாமல் !

அலைபேசியின் ஒவ்வொரு
சிணுங்கலும்அழவைத்துக்
கொண்டேயிருக்கிறது !
அழைப்பில் நீ இல்லை என்பதை
எண்களின் வழியே என்னிடம் காட்டிக் காட்டி !

பாலைவனத்தில் தவித்த போது
நீராய் வந்தாய் !
பாவம் செய்து துடித்த போது
மன்னிப்பாய் நின்றாய் !

தூக்கமின்றி தவித்த நாட்களில்
தாலாட்டும் தாயாய் வந்தாய் !
தூக்கம் தாளாது அழுத போது
கண்ணீர் துடைக்கும் கரங்கள் தந்தாய்!

காதலிக்க கற்று தந்தாய்
கடவுளிடம் கூட்டிசென்றாய்!
கவிதைகளைப் போற்றி வந்தாய்!
கவலைகளைப் போக்கி நின்றாய் !

இப்படியே வீழ்ந்து கிடந்தால்
உன்னுடன் பேச மாட்டேனென்று
வீம்பு கொண்டாய்!

வேலைதேடு என்று
என்னிடம் தினம் தினம்
வம்பு செய்தாய் !

வேள்விகள் ஏதுமின்றி
வாழ்வியல் கற்று தந்தாய்!

தோழியே நீ இல்லாத வாழ்க்கையை
வாழ்வது எப்படி என்று
ஏன் சொல்லாமல் சென்றாய்?

பௌர்ணமி நிலவாய்
என்னுடன் இருந்தவளே.!
ஏன் நிரந்தர அமாவாசையாய்
என்னைவிட்டு நீங்கிச் சென்றாய் ?!

ஒரே ஒருமுறை தோழியே வந்துவிடு !
என் கேள்விக்கெல்லாம் பதிலைத் தந்துவிடு !

எழுதியவர் : ராஜேஷ் 03 (18-May-13, 7:11 pm)
பார்வை : 1121

மேலே