தொடர்ந்து ஐஸ் வாட்டர் குடிப்பவரா நீங்கள்??

வீட்ல நுழைஞ்சதும் நேரா ஃப்ரிஜ்ஜை திறந்து தண்ணீர் பாட்டிலில் உள்ள தண்ணீரை சில்லென்று குடிப்பதை பெரும்பாலானோர் வழக்கமாக்கிக்கொண்டுள்ளனர். அது கிராமமோ, நகரமோ இன்றைக்கு குளிர்ந்த நீரை தான் பெரும்பாலானோர் பயன்படுத்துகின்றனர். கோடை காலம் தொடங்கி விட்டால் சொல்லவே வேண்டாம். காலை உணவில் தொடங்கி இரவு உணவு வரைக்கும் அருந்துவதற்குப் பயன்படுத்துவது குளிர்ந்த நீரைத்தான்.

இவ்வாறு குளிர்ந்த நீர் அருந்துவது ஆபத்தானது என்கின்றனர் மருத்துவர் கள். இது இதயத்தை பாதிக்கிறது. புற்றுநோய்க்கும் வழி வகுக்கிறது என்கின்றனர். உணவு உண்டவுடன் குளிர்ச்சியான தண்ணீரை குடித்தால், அது நாம் சாப்பிட்ட உணவில் உள்ள எண்ணெய்த் துகள்களை கெட்டி யாக்கி விடுகிறது. இதனால், சாப்பிட்ட உணவு ஜீரணம் ஆவதில் சிக்கல் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி, உடலில் இருக்கும் கொழுப்பின் அளவு அதி கரிக்கவும் அது காரணமாகி விடுகிறது. இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் இதயம், சிறுநீரகம் தொடர்பான பல பிரச்சினைகள் வரலாம்' என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். மாரடைப்பு நோய் உள்ளிட்ட இதய நோய்க்கு ஆளானவர்கள் சாப்பிடும்போது குளிர்ந்த நீரை அருந்தவே கூடாது என்றும் அவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

குளிர்ந்த தண்ணீர் குடிப்பதனால் வேறு பல தீமைகளும் ஏற்படும் என்றும் அவர்கள் பட்டியலிட்டுள்ளனர். நெஞ்செரிச்சல், உயர் ரத்த அழுத்தம், சரும பாதிப்பு, பக்கவாதம், வயிற்றுவலி, மைக்ரேன் என்னும் ஒற்றைத் தலைவலி, மூளை உறைவு நோய், பற்கள் பாதிப்பு போன்றவையும் ஏற்படுகின்றன.

எனவே குளிர்ந்த தண்ணீர் அருந்துவதை தவிர்த்துவிடுங்கள் அதற்கு பதிலாக வெதுவெதுப்பான நீர் அருந்துங்கள் என்று அறிவுறுத்ததுகிறார் கள் மருத்துவர்கள்!..

எழுதியவர் : அருன்மனோ (19-May-13, 7:55 pm)
பார்வை : 85

மேலே