அரசு வேலை
துக்கத்தின் பொழுது
அழுகை வரும் !
வெற்றியின் பொழுது
மகிழ்ச்சி வரும் !
உழைப்பின் பொழுது
உற்சாகம் வரும் !
வசதி உள்ளபொழுது
சொந்தம் வரும் !
பருவத்தின் பொழுது
காதல் வரும் !
மரணத்தின் பொழுது
பயம் வரும் !
முதுமையின் பொழுது
அரசு வேலை வரும் .
************* நம்பிக்கையுடன் .சிங்கை கார்முகிலன்