செய்தித்தாளும் .............வாழ்க்கையும்

===உலகமே விழித்ததும்
கண்கள் விரும்பித் தேடும்
இன்றைய செய்தித்தாள்
தாங்கிவருவது
நேற்றைய செய்திகளை .....

மனிதமனமும் விழித்தெழுந்ததும்
இன்றைய மகிழ்சியை இடறி
நேற்றைய கவலையைத்
தாங்கித்தான் தொடர்கிறது
இன்றைய வாழ்க்கையை ......

===சூடான செய்திகள்
சுவையான பக்கங்கள்
வியப்பூட்டும் விசித்திரங்கள்
இருந்தாலும் கண்கள் தேடுவது
கண்றாவிகளைத்தான் ....

வாழ்க்கையில் ஆயிரம்
வசந்தம் வீசினாலும்
சின்னஞ்சிறு சிலாய்ப்புகளை
சித்திரமாக்கி வாழ்க்கையை
புழங்கி கழியாதீர்....

===இனிமைதரும் முதல்
கடை பக்கத்தைவிட
நடுபக்கத்தில் தான்
மனதினிக்கும் வாசகங்கள்
பூத்திருக்கும் மறவாதீர் .....

மனித வாழ்க்கையிலும்
பிறப்பினும் இறப்பினும்
நடுவில்தான் தேடல்
இதழ் விரித்து தேன்கசியும்
அள்ளிப் பருக ஆராயாதீர்.. ...

===இன்றைய செய்தித்தாள்
நாளைய குப்பைத்தாள்
கசக்கி எறிந்து விடலாம்
காரணமே இன்றி கண்டு
கண்கலங்குபவர் யாவருமில்லை.......

இன்றைய வாழ்க்கைதான்
நாளைய வரலாறு
கழற்றி எறிய அது ஒன்றும்
கடையாணி அல்ல
வாழ்க்கை சக்கரத்தை
கற்பென்று காத்துக் கொள் .......

மிகைப்படுத்தப்பட்ட செய்தியும்
உணர்ச்சிவசப்பட்ட வாழ்க்கையும்
உதவாது ஆராய்ந்தால் ......

எழுதியவர் : bhanukl (28-May-13, 6:33 pm)
பார்வை : 259

மேலே