சீமான், வைக்கோ போன்றவர்கள் இலங்கைத் தமிழர்களை வேதனை படுத்துகிறார்களாம் - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ...!

மதுரையில் நடந்த ராஜீவ் காந்தி நினைவு நாள் மற்றும் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. அங்கு பேசிய ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இவ்வாறு கூறினார். தமிழ் ஈழம் என்று தமிழகத்தில் பேசும் சிலர் இலங்கை தமிழர்களுக்காக செய்தது என்ன..? மத்திய அரசு ரூ 48,000 கோடி மதிப்புள்ள நல திட்ட உதவிகளை இலங்கை தமிழர்களுக்கு செய்து வருகிறது.

தமிழகத்தில் உள்ள வைக்கோ சீமான் போன்றவர்கள் தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாமில் உள்ள தமிழர்களுக்கு கூட எந்த நன்மையையும் செய்யாதவர்கள். ஆனால் இங்கே பேசி, பேசி இலங்கையில் உள்ள தமிழர்களை வேதனைப்படுத்தி வருகிறார்கள்.

மக்களைப் பற்றியோ மக்கள் நலனை பற்றியோ கிஞ்சிற்றும் அக்கறையோ பொறுப்புகளோ இல்லாதவர்கள் இவ்வாறு பேசாமல் பின் எவ்வாறு பேச முடியும்...? என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்...!

சங்கிலிக்கருப்பு

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (3-Jun-13, 4:53 pm)
சேர்த்தது : சங்கிலிக்கருப்பு
பார்வை : 94

மேலே