மரணம் தரும் வலி
சொல்லாமல் செல்லும்
உயிர் மிகக் கொடுமையானது
நிமிடங்களில் மரணம்...!
நேரம் ஆக ஆக ஒவ்வொரு
ஆணியாகப் பெட்டியில்
அறையப் பட்டது போல...!
கொடுமையானது மரணம்
மிகவும் வன்மையனதும்
இளமையில் மரணம்...!
நொடியில் மாண்டால்
மாரடைப்பில் மரணம்
வலியைக் கூட அனுபவிக்க முடியாத
நிரந்தர வலியானது மரணம்....!
மரணம் எப்போது?எப்படி?
முன்னோர்கள் பல பிள்ளைகள் பெற்று
ஒன்றோ இரண்டோ தேற
நோயின் கொடுமையால் மரணம்...!
இன்று நாம் அறிவியல்
கண்டு பிடிப்புகளால்
நோய் கண்டறிவதும் கட்டுப் படுத்துவதும்
இரண்டு பிள்ளைகளே போதும்
என்று தடுத்தது மரணம் ...!
கருவைக் கலைக்கும்
சிசுவின் மரணம்
பசி பஞ்சம் பட்டினி என
உணவின்றி தினம் தினம்
சாகும் உயிர்கள் மரணம் ...!
இவ்வாறெல்லாம் மரணம்
நம் வாழ்வையே மாற்றி விடுகின்றதே
விடியல் என்று விடியுமோ கடவுளே !