மரணம்
சிலருக்கு
விதி கொடுத்தனுப்பும்
விடுதலைப்பத்திரம்.
இருளில் கழியும் வாழ்வில்
இறுதியில் வரும் வெளிச்சம்.
முடிவு தெரியாத
சூனியச் சுற்றுலாவுக்கு
முதற்கட்ட அழைப்பு.
இறைவனும் மரணமும்
இயல்பிலே ஒன்று தான்.
இரண்டும்
எளிதில் வசப்படுவதில்லை.
புறக்கணிப்பவரையும்
புறக்கணிப்பதில்லை.