மகா கவியின் மெகா சிரிப்பு.....!!!!

கவிஞரே
நீர் சிரித்த போது

நெருப்பு - அது
நெருப் பூ வானது....!!!

கனல் பறக்கும்
கண்களிலே தமிழ்
காதல் மயக்கம் வந்ததுவோ ?!!!

களிப்புற்றேன் - மகா கவியே
களிப்புற்றேன்

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்
அப்போது கண்களில் கனல் கண்டேன்

கண்ணம்மா என்ற பேர் சொல்கையில்
கவிஞனே கண்களில் காதல் கண்டேன்

களிப்புற்றேன் - மகா கவியே
களிப்புற்றேன்

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (26-Jun-13, 11:51 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 99

மேலே