என்னவென்றே புரியாமல்

என்றோ விட்ட இடத்திலிருந்து
இன்றும் தொடரப்பார்க்கிறேன்....

இது காலத்தின் கட்டயமா?
என் மனதின் ஆசையா?
எண்ணங்களின் தேவையா?

இப்படியெல்லாம் வாழ்க்கையை
வாழ வேண்டும் என நினைக்கும்
பலரில் நானும் ஒருத்தி ...

உதிர்ந்து விட்டதாய் எண்ணிய
என் ஆசை விதைகள் இன்று
விருட்சமாய் ..

என்றோ புதைத்து விட்டேன்
என்று எண்ணிய என் ஆசைகள்
சிறகை விறித்திருக்கிறது
வானம் வரை...

வாசல் தாண்ட மறுத்தவள்
இன்று வானம் ஏற வழி பார்க்கிறேன்...

கடந்து வந்த பாதையை
காலம் சொல்கிறது ..
இழந்து விட்ட
என் மகிழ்ச்சியை யார் சொல்வது?

நேரத்தை சுமக்கும் கடிகாரமாய்
ஆசையை சுமந்திருக்கிறேன் பாறையின்
பட்டமரத்தில் அநியாயமாய்.....

குளிர் நிலவாய் படர வேண்டிய
பாதையில் உச்சி வெய்யில்
சூரியனாய் சுழன்றிருக்கிறேன்...

முன்பெல்லாம் விஞ்ஞானம்
பேசியவள் இப்போதெல்லாம்
மெய்ஞானம் பேசுகிறேன்
காலத்தின் கட்டாயத்தில்....

Written by ,,,,,



ஆனந்தி.ரா

எழுதியவர் : ஆனந்தி.ரா (12-Jul-13, 7:53 pm)
பார்வை : 74

மேலே