சிகரங்கள் காலடி தேடும்!

உழைப்புக் கடலில் மூழ்கினால்
வெற்றி முத்துக்கள் குவியும்!
உறவு நதியில் நீந்தினால்
மகிழ்ச்சிப் பூக்கள் விரியும்

கனவுவீதியில் உலவினால்
இலட்சியம் நெஞ்சில் படரும்!
முயற்சியின் சிறகுகள் அசைந்தால்
தடைகள் உடைந்து சிதறும்!

அறிவுமழையில் நனைந்தால்
ஆனந்த வெள்ளம் பெருகும்!
நேரிய வழியில் சென்றால்
நன்மை என்றும் நிறையும்!

மவுனத்தின் நிழலில் நின்றால்
மனசின் சக்திகள் உயரும்!
சிந்தனைகள் கிளையில் ஆடினால்
சிகரங்கள் காலடி தேடும்...

எழுதியவர் : (23-Jul-13, 11:45 am)
சேர்த்தது : நித்யாதேவி
பார்வை : 53

மேலே