கசக்கும் உறவுகள்

இருக்கின்ற வேளையில்
இனிக்கும் உறவுகள்
தவிக்கின்ற பொழுதில்
கசக்குது உண்மையில் .........

ரத்தம் உறிஞ்சும் அட்டை பூச்சியாய்
இருக்கும் வரையில் உறிந்துவிட்டு
வற்றிய உடனே எட்டி ஓடும்
வஞ்சனை உலகம் இதுதான் உண்மை .......

நாளும் நடித்து நாடகம் காட்டும்
நல்லவர்கள் போல் வேடம் போடும்
உள்ளபடி பார்த்தால் எல்லாம் பொய்யே
உணர்வதற்கு கொஞ்சம் காலம் ஆகும் .........

வார்த்தைகள் ஒன்றும் அம்பாய் மாறும்
நெஞ்சை கிழித்து ரத்தம் பீறும்
நல்லமனதை அறிய விரும்பினால்
நீ துன்பம் கண்டதாய் நடித்துபார் .......

இக்கரை வந்தால் அக்கறை பச்சை
இதுதான் இன்றைய உறவின் நிலையே
உன்னிடம் இல்லாதது அவரிடம் இருந்தால்
உந்தன் நிலையோ பரிதாப நிலைமை .........

அன்பாய் இருப்பதாய் போட்ட வேடம்
அனைத்தும் களையும் துன்ப வேளையில்
இருக்கும் வரையில் உன்னிடம் இருப்பார்
இல்லாமல் போகையில் உன்னை வெறுப்பார் ......

பாசம் என்பது பொய்யான ஒன்று
பணத்தையே தேடுது உலகம் இன்று
உண்மை நிலையை நீயே அறிவாய்
உந்தன் துன்பத்தில் நன்கு உணர்வார் ........

இருக்கின்ற வேளையில் இனிக்கின்ற உறவுகள்
இல்லாமல் போனால் கசக்கும் உறவுகள்
நிதர்சன உலகத்தை நீ அறிந்து வாழு
நிலைமையை நீ உணர்ந்து நிலையாய் வாழு ........

எழுதியவர் : வினாயகமுருகன் (4-Aug-13, 6:33 pm)
பார்வை : 289

மேலே