தாயின் தவிப்பு.....!

ஒன்பது மாதம் சுமந்து
குறைப் பிரசவமாய்ப் பிறந்து
நான்கு ஐந்து மாதங்களில் - அறுவை
சிகிட்சை! பலனின்றி மறைந்தாய்!

என் கருவினில் உதித்து
நெஞ்சினில் வாழ்ந்து
வாழ்வில் கலந்த நீ
எங்கே சென்றாயோ!

அன்பே! அபிராமியே!
உன்னைத் தேடுகிறேன்
தவிப்பினில் ஏங்குகிறேன்
துன்பத்தில் வாடுகிறேன்!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Aug-13, 10:36 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 96

மேலே