எனக்கு வேண்டும்......நண்பா

அன்னையின் மடியில் - என்
பாரத அன்னையின் மடியில்
ஆடி பாடி சிறந்த அறிவோடு குழந்தைகள்
போர் பொறாமை இல்லாத புண்ணிய நாடுகள் ....

சிறைசாலை இல்லாத சமுதாயம்!
மருத்துவமனை இல்லாத சுகமான வாழ்க்கை ,
வெள்ளி நிலவில் மண்ணின் சுவடு தெரியும்
நீரோடை ...
மஞ்சள் பூசிய முகத்தில் என்றும் புன்னகையுடன் பெண்கள்....

சாதிகள் அற்ற சங்கங்கள்
மதுகடை இல்லாத தெருக்கள்
பொது நலனையே கருதும் அரசியல்வாதிகள்...
சொத்துகள் சேர்க்காத சீர்திருத்தவாதிகள்.....

பணம் கேட்காத கல்வி நிலையங்கள்
பணத்திற்கு அடிமையாகாத மக்கள்
பூச்சி புழு இல்லாத ரேசன் பொருட்கள்
உழைப்பிற்கு தேவையான ஊதியம்....

இவையல்லாம் மொத்தமாய்

என் முன்னோர்கள் பெறவில்லை - பொறுமையாய் இருந்தும் எனக்கும் கிடைக்கவில்லை- என்
சந்ததினருக்கும் கிடைக்க எத்தனை காலம் வேண்டும்!

சிந்திப்போம்! சிந்திப்போம்!! சிந்திப்போம்!!!

எழுதியவர் : இனிய கருப்பாயி (8-Aug-13, 2:34 pm)
சேர்த்தது : iniya karuppaie
பார்வை : 80

மேலே