+சிவப்பு விளக்கு!+

பல உயிர்கள் வாழ‌
பல மனங்கள்
மடியுமிடம்...

பல குடும்பம் வாழ‌
பலர் குப்பையான
இடம்...

பலர் பசியைப் போக்க‌
இவள் பிணியால்
வாடுமிடம்...

பலருக்கு ஒதுக்கப்பட்ட‌
இவ்விடம் இவளுக்கென்று
செதுக்கப்பட்டது...

பலருக்கு இது சொர்க்கம்!
இங்குள்ளோருக்கோ
இது நரகம்!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (9-Aug-13, 9:57 pm)
பார்வை : 98

மேலே