செயித்து விடு - சிரித்து விடு - செந்தமிழை படித்து விடு...!!!
செத்துப் போனா
சாம்பல் மிஞ்சும்....!!!
சிரிப்புக்கென்ன
தம்பி பஞ்சம்...?!
சிந்தையில் வேண்டாம்
என்றுமே வஞ்சம்...
சிறப்புற நினைவுகள்
சிந்திக்க நெஞ்சம்
செவிதனைக் கொடுடா
சொல்கிறேன் கொஞ்சம்
என் தமிழ் பழகு நீ
செந்தமிழ் கொஞ்சும்.....!!!!