செயித்து விடு - சிரித்து விடு - செந்தமிழை படித்து விடு...!!!

செத்துப் போனா
சாம்பல் மிஞ்சும்....!!!

சிரிப்புக்கென்ன
தம்பி பஞ்சம்...?!

சிந்தையில் வேண்டாம்
என்றுமே வஞ்சம்...

சிறப்புற நினைவுகள்
சிந்திக்க நெஞ்சம்

செவிதனைக் கொடுடா
சொல்கிறேன் கொஞ்சம்

என் தமிழ் பழகு நீ
செந்தமிழ் கொஞ்சும்.....!!!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (11-Aug-13, 5:35 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 68

மேலே