“என்றும் உன் அன்பை நாடி”

இனபமும் துன்பமுமின்றி
வாழ்கையில்லை
சின்ன சின்ன சண்டைகளின்றி
காதலும் தாம்பத்தியமுமில்லை
இன்பத்தைவிட துக்கத்திலேயே
உன்மையான தாம்பத்தியமும்
காதலின் பலமும் அதிகம்
வெளிப்படுகிறது என்பதால்
தான் அன்பே என்றும்
உன்னிடம் மட்டும்
அடிக்கடி சின்ன சின்ன
சண்டையிடுகிறேன்
என்றும் உன் அன்பை நாடி
=== க.பிரபு தமிழன்