அன்னையும் இவளே
![](https://eluthu.com/images/loading.gif)
புண்ணியம் செய்தது பூமி
இறைவன் பெண்ணைப்
படைத்தான்
மானையும் மயிலையும்
உவமை சொல்லி
கவிதையில் வைத்தார் அன்று
மண்ணிலும் விண்ணிலும்
தன்னை வைத்து
காவியம் படைத்தார் பெண்கள் இன்று.
நன்றி இறைவா ! உன்னைப் போல்
இந்த பூமியை
ஈன்று தரும் அன்னையும் இவளே !
~~~கல்பனா பாரதி~~~