வீடெல்லாம்......
உன் வெட்கத்தை
திரை சீலையில்
தொங்க விடுகிறாய்,
உன் கோபத்தை
ஜன்னல் கதவில்
படீரிட செய்கிறாய்,
உன் ஞாபத்தை
நிலைக்கதவில்
நிற்க்கச்செய்கிறாய்,
உன் வசீகரத்தை
துணிக்கொடியில்
காயப்போடுகிறாய்,
உன் எதிர்ப்பார்தலை
காலண்டரில்
கிழிக்கிறாய்,
உன் வனப்புகளை
நிலைக்கண்ணாடியில்
நிதம் பூசுகிறாய்,
உன் பாசங்குகளை
சில சமயங்களில்
சமைக்கிறாய்,
உன் வெறுப்பை
திசைக்கொன்றென
வீசியிருக்கும்
செருப்புகளில்
காண்பிக்கிறாய்,