என்றும் அழிவில்லை

என்னவளே
என் உடலெரிந்தால்
உன் நினைவுகளும்
எரிந்து விடும் என்பதற்காகத்தான் !
உன்னை இதையத்தில்
வைக்கவில்லை ?
கண்ணொளி இழந்தால்
கண்மணி உன் தரிசனமும்
ஒளிஇழந்து விடுமே என்பதற்காகத்தான் !
உன்னை கண்ணுக்குள்
வைக்கவில்லை ?
சுவாசம் என்றும் ,
நேசம் என்றும் சொன்னால்
அவை உடல்வரைதான் என்பதற்காகத்தான் !
உன்னை உடலுக்குள்
வைக்கவில்லை ?
அழியாமல்
நீ ?
என் நினைவுகளில்
ஜென்மக்கல்தோறும்
ஜனித்திருக்க வேண்டும் என்பதற்காகத்தான்
உன்னை உயிருக்குள்
வைத்திருக்கிறேன் ?

எழுதியவர் : anandh (23-Aug-13, 6:14 pm)
சேர்த்தது : asaran
Tanglish : endrum azhivillai
பார்வை : 61

மேலே