கண்ணாடி முன் நின்று கண் விழித்துப் பார்த்து
கொஞ்சம் உன்னையே
குறை சொல்லிப் பாரு
கோபம் வர வேண்டும்
உண்மையில் உனக்கு
நல்லது கெட்டதை
நலமே மனம் அறிந்தால்.....
நாளைய விடியலின்
தலைவனே நீ தானே.....
நான்தான் சகலமும்
என்கின்ற கர்வம்
நம்மை விழுங்கிடும்
நாகத்தின் விஷமே......