மலையேறும் காலம்

பவழத்தில் கோர்த்த
முத்துச் சரம்
உன் புன்னகை அதரம்
என்று கவிதை சொன்னேன்
சிரித்தாள் .
அதரத்தைத் தொட்ட
உன் முத்துக் கவிதையை
ரசிக்கிறேன்.
நீ எவரெஸ்ட் சிகரத்தை
தொட்டு வந்து
பின் கவிதை தா
காதலை தொடரலாம்
என்கிறாள்.

மலையேறப்
பயிற்சிப் பள்ளியில் சேரவா?
அல்லது
கடற்கரையே போதும்
என்று சொல்லும்
இன்னொரு காதலியை தேடவா ?
யோசித்துக் கொண்டிருக்கிறேன்

வில்லொடித்த காலம் போய்
மலையேறும் காலம்

மாலைக்கு மலையா
இறைவா !

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (27-Aug-13, 5:43 pm)
பார்வை : 226

மேலே