தலைக்கனம்

தட தடத்து
கட கடக்கும்
ஒரு ரயிலின்

ஒவ்வாத
ஓசை நயமாய் நம்முள் !

முட்டி மோத
முதுகெலும்பில்லா
முறுக்கு மீசையின்
வரட்டு கௌரவம் இது !

யானை போல்
நம்மை
எண்ணத் தூண்டும் !

சிறு
குரங்கு போல்
தாவிப் பார்க்கும் !

தான்
தெரு நாய் என்பதை
ஏற்க்க மறுக்கும் !

பெரும்
ஓநாய் என்று
ஓலம் போடும் !

மமதை
கொள்ளும் !

அகந்தை
ஏற்றும் !

தென்றலென
புயலைச் சொல்லும் !

பஞ்சாகி
நீ பறப்பாய் !

பாவம் என்று
உனைச்சொல்லி
அது சிரிக்கும் !

எழுதியவர் : பிரகாசக்கவி எம்.பீ அன்வர் (16-Sep-13, 9:28 pm)
பார்வை : 304

மேலே