சிந்திப்பீர்

ராசிக்கல் போட்டுக் கொண்டால்
ராஜ யோகம் கூடிடுமோ ?
கங்கை நதியில் நீராட
கர்ம வினை நீங்கிடுமோ ?

வாஸ்துப்படி வாசல் மாற்ற
வந்த துன்பம் போய்விடுமோ ?
எண்கணிதப்படி பெயர் மாற்ற
எட்டா உயரம் கிட்டிடுமோ ?

கட்டம்காட்டும் வழி செல்ல
பட்ட பாடு பறந்திடுமோ ?
சாமியாரைச் சரண் அடைந்தால்
சகல யோகம் சித்திக்குமோ ?

சிந்தித்து செயல்பட்டால்
சிந்தனையில் தெளிவிருந்தால்
தன்னம்பிக்கை நிறைந்திருந்தால்
தளராத திடமிருந்தால்

போராடும் துணிவிருந்தால்
நேர்மைக் குணமிருந்தால்
கிட்டவரும் வினைகளுமே
எட்டிச்செல்லும் காண்பீரே .....!!!!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (20-Sep-13, 8:34 pm)
பார்வை : 126

மேலே