சிந்திப்பீர்
ராசிக்கல் போட்டுக் கொண்டால்
ராஜ யோகம் கூடிடுமோ ?
கங்கை நதியில் நீராட
கர்ம வினை நீங்கிடுமோ ?
வாஸ்துப்படி வாசல் மாற்ற
வந்த துன்பம் போய்விடுமோ ?
எண்கணிதப்படி பெயர் மாற்ற
எட்டா உயரம் கிட்டிடுமோ ?
கட்டம்காட்டும் வழி செல்ல
பட்ட பாடு பறந்திடுமோ ?
சாமியாரைச் சரண் அடைந்தால்
சகல யோகம் சித்திக்குமோ ?
சிந்தித்து செயல்பட்டால்
சிந்தனையில் தெளிவிருந்தால்
தன்னம்பிக்கை நிறைந்திருந்தால்
தளராத திடமிருந்தால்
போராடும் துணிவிருந்தால்
நேர்மைக் குணமிருந்தால்
கிட்டவரும் வினைகளுமே
எட்டிச்செல்லும் காண்பீரே .....!!!!