உடைந்த என் கனவுகளை....!!!!!

உடைந்த
என் கனவுகளை
பொருக்கிகொண்டிருந்தேன்

அப்பொழுது
அநாதரவாய்
விடப்பட்ட
கனவொன்று
அழுதுகொண்டிருந்தது

ஏன் அழுகிறாய்
என்றேன்?

ஆற்றாமையால்
தன்னை
யாரோ
விட்டு விட்டார்கள்
என விசும்பியது

உன் பெயர் என்னவென்றேன்?
ஏக்கம் என்றது!!

பல
நிறைவேற்றப்படாத
ஆசைகள்
தன்னைப்போல்
அநாதைகலாக்கபட்டு
கண்ணீர் சிந்துகிறது
என கூறி
விம்மியது
ஏக்கம்...!!!!


எழுதியவர் : ராஜேஷ் நடராஜன் (4-Jan-11, 9:40 am)
சேர்த்தது : rajesh natarajan
பார்வை : 375

மேலே