பறவை கூட்டங்களுடன்....!!!

ஒரு நாள்
பறவை கூட்டங்களுடன்
பறக்க நேர்ந்தது
எனக்கு

பறவையின்
வழி தடத்தில்
பறக்க
சற்றே தடுமாறினேன்

கூட்டத்தில்
புதிதாய் பறந்த
என்னை கண்டு
கூச்சல் எழுப்பின

இறகுகளை உதிர்த்து
எதிர்ப்பு தெரிவித்தன
இறைவனை தேடி
வருவதை உரைத்ததும்
புருவம் உயர்த்தியது
பறவைகள்

மேகங்களை கிழித்து
வாடையில் நனைந்து
பறக்கையில்
திடீர் இரைச்சல்
கூட்டத்தில்

பின்னொலியில்
கண்கள் கூச
கழுகு வாகனத்தில்
அமர்ந்து
கடவுள் எதிரே வருகிறார் !!

திடீரென
பறவைகள் பாதை
மாற கடவுளை கண்ட
பரவசத்தில்
பறக்க மறந்தேன்

பறவைகள் மொத்தம்
ஒன்றுகூடி அதன்
இறகுகளால்
என் கைகளை பிடித்து
சொர்கத்தின்
வாசல் வரை
கூட்டி செல்கின்றன......!!!


எழுதியவர் : rajesh natarajan (3-Jan-11, 11:03 pm)
சேர்த்தது : rajesh natarajan
பார்வை : 355

மேலே