அம்மாவுக்கு

என்ன பெத்த தாயே
எங்கதான் போனியோ...!
என்னை இங்கு தவிக்கவிட்டு
தெய்வமாய் ஆனீயோ...!
நினைவு தெரிந்த நாள் முதலா
தெய்வம் எனக்கு நீயம்மா...!
உன் நினைவு என்னில் உள்ள வரை
நெஞ்சில் பற்றி எரியும் தீயம்மா...!
கனவுகூட கண்டதில்லை
உனை பிரிந்திருக்க தாயே...!
ஒரு கனவை போல மறைந்ததென்ன
எனை கலங்கவைத்து நீயே...!
எனை ஆளாக்கி பார்க்கத்தானே
உழைத்து ஓடாய் போனாய்...! _ உனக்கு
ஆக்கிபோட நினைகும்போதா
நீ மாரடைத்து போனாய்...!
தாயே உந்தன் அன்புக்குதான்
உலகில் ஏதும் இணையில்ல...!
நீ பிரிந்த நொடி முதலாய்
எனக்கு யாரும் துணையில்ல...!
நிம்மதியாய் நான் உறங்க
தாயே உந்தன் மடியில்லை...!
சத்தியமா உன் பிரிவை
என்னால் தங்க முடியல...!
கனமழை போலே உந்தன்
அன்பு நெஞ்சில் விழுகுதே...!
அதை நினைத்து தினம் கண்கள்
கண்ணீர் மழை பொழியுதே...!

எழுதியவர் : புனவை பாக்யா (7-Jan-11, 12:55 pm)
சேர்த்தது : bakya
Tanglish : ammavuku
பார்வை : 525

மேலே