புத்தாண்டு வேண்டுதல்
தோழா புதிதாய் பிறந்திடுவோம்
பட்ட வலி மறந்திடுவோம்
அன்னை அவள் ஆசியுடன்
அகிலம் போற்ற வாழ்ந்திடுவோம்.
புதிய விடியல் நாளை உண்டு
அது நலமாய் மாற சக்தி வேண்டும்
நீதி வேண்டும் ,நேர்மை வேண்டும்
இவை யாவும கொண்ட தலைவன் வேண்டும்.
பேசி களைக்க வாய்கள் வேண்டாம்
உழைத்து வாழ கூடுதலாய் கைகள் வேண்டும்
நான் என்ற சிந்தை அழித்து
நாம் என்ற எண்ணமும் வேண்டும்.
மதங் கொண்ட மதம் வேண்டாம்
மானுடம் வளர மகத்தான அன்பு வேண்டும்
இப்படி வேண்டி வேண்டி பெறாத
வரங்கள் ஏராளம் இங்கு உண்டு.
இவை யாவும வேண்டாத பகுத்தறிவு
உயர்வு வேண்டும் இப்புத்தாண்டிலே.