நான் எப்படி நானாக.........
என் கண்ணுக்கு
மை இடும் போது
கலங்கிய உன் விழிகள்....
என் நெற்றியில் பொட்டு
வைக்கும் போது
சுருங்கும் உன் நெற்றி.......
என் கையில் வளைகள் அணியும் போது
துவண்டு கிடக்கும் உன் கரங்கள்......
என் பாதங்களில் காலனி போட்ட போது.......
இப்போது துக்கத்தில் இருக்கும்
வீரத்தின் விளை நிலமான
உன் பாதங்கள்.........
என் தட்டில் உணவு வைக்கும் போது
உணவை ஏற்க மறுத்து நிற்கும்
உன் தொண்டை குழிகள்....
இப்படி எனது எல்லா நிகழ்விலும்
உனது சம்பந்தப்பட்ட
எல்லாம் என் நினைவில் நின்று
என்னை வாட்ட
நான் எப்படி
நானாக இருக்க முடியும்??