வாடா என் தோழா.....
வாடா என் தோழா...
வாழனுமே நாம் வாடா!
சொந்தங்களை இழந்தது போதும்!
சொப்பனத்தில் மிதந்தது போதும்!
சொக்கத் தங்கங்களே.....
செந்தமிழின் புதல்வர்களே.....
கண்ணீரிலே ....
நம் வாழ்க்கை
கடக்கவா வேண்டும்?
கன்னி நெஞ்சங்களை -சிங்கள
காடையருக்கு....
தாரைவார்க்கவா வேண்டும்?
கருந்தேகத்
தமிழன் நெஞ்சுறுதி
பார்க்காத இனம்
இவ்வுலகில் இல்லை!-இது
உனக்குத் தெரியாதா?
தம்பியுடையான்
படைக்கு அஞ்சான்!
தமிழன் என்றும்
அடிமையாய் வாழான்!
தமிழர்
தலைநிமிர வேண்டும்!
தமிழருக்கென்று தனியொரு
தரணி வேண்டும்!
வாடா என் தோழா....
தலைவன் வழியில்
அணி திரள்வோம்!
தமிழர் கனவாம்
தமிழீழம் மீட்க.....
- மா.ஞானசூரி