+நாட்கள் விடியுது வாழ்க்கை விடியல+

பொழுது புலர்ந்தது!
பனியும் விழுந்தது!
காட்சி தெரிந்தது!
கவிதை எழுந்தது!

அமைதி சாலையில்
ஆழிச் சத்தங்கள்!
தூய வானத்தில்
கரிய எச்சங்கள்!

ரயிலின் பாதையில்
மனித மிச்சங்கள்!
வானின் மேனியில்
பறவை மச்சங்கள்!

சோக செய்தியாய்
நிறைந்த பத்திரிக்கைகள்!
போலி நம்பிக்கையை
ஊட்டும் அறிக்கைகள்!

பணத்தை நோக்கியே
பலரின் பயணங்கள்!
அதனால் சிலருக்கு
வாழ்வே மயானங்கள்!

தோற்றப் பிழைகளால்
ஆன மனங்களால்
நாட்கள் விடியுது
வாழ்க்கை விடியல!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (29-Oct-13, 9:56 am)
பார்வை : 151

மேலே