எறும்பு
எறும்பு
சாரை சாரையாய் செல்லுகின்றாய்
சாராம்சம் ஏதோ சொல்லுகின்றாய்
விளங்க வைக்கிறாய்
சீறாய் வழி நடத்த,
ஓய்வின்றி உழைக்க,
சுறுசுறுப்பை பறைசாற்றுகின்றாய்
நொடிதோரும்
இருப்பை அறிந்து
இனத்தை அழைக்கும்
பொதுநலம்,சிறிதுமில்லை
சுயநலம்
நசுக்கிப்போட்டாலும்
நகரத்துடிக்கிறாய்
எத்தனையடுக்குப் பாதுகாப்பையும்
எகத்தாளமாய் தாண்டிச்செல்கிறாய்
ஆறுக்கால் பூச்சி நீ!
அகிலமெங்கும் உனதாட்சி
நீ இல்லா இடமேது
அபாரம்!
குழுவாக வாழ்வதும்
வாழ்விடத்தை பாதுகாப்பதும்
மனிதனுக்கு முன்னே பிறந்து
மதிப்பை பெற்றுவிட்டாய்
மனிதன் மதிக்கிறான்,உன்
உழைப்பை!சிறப்பை!!
-வளர்புரம் யுவராசன்.