நடந்து செல்லும் பாதைகளில் - வாழ்வில்

ஆமைக்கு ஓடென
மனிதனுக்கு ஆன்மிகம்....!

புலனடக்கம் பழகிவிட்டால்
புலப்படாது இன்னல்கள் - இதை
புரிந்திடாது அலைந்திட்டால்
பூத்து சிரிக்கும் சிக்கல்கள்....!

தன்னடக்கம் இருந்து விட்டால்
தரணியே சொர்க்கமாகும்
தலைக்கனம் வந்து விட்டால்
தன்னிலையும் நரகமாகும்.....!

சுகம் என்று சொல்வது
சுயநலம் என்பதில்லை...! அது
சுற்றமும் மகிழ்வுற வாழ்வை
சுவைத்திட வைப்பதே....!

வாழ்வினை ரசியுங்கள் அது
வசந்தத்தின் மறு உருவம்
வாய் விட்டு சிரியுங்கள் இது
வளம் நிறைந்த நிகழ் காலம்.....!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (13-Nov-13, 6:43 am)
பார்வை : 89

மேலே