உன் நட்பின் சுகம்

உள்ளம் கலங்கும் போதும்
உன்னை நினைத்தால்
உள்ளமது குதுகளிக்கும்..
எத்தனை இனிமை
என்னவளே உன் நட்பினிலே...
தவமின்றி நான் பெற்ற வரம் நீ..
வசந்தம் வந்தது உன்னாலே,
வலிகள் மறைந்தது உன் அன்பாலே...
அன்பால் சிறைவைத்தாய் ,
ஆனந்தத்தை அள்ளி தந்தாய்..
ஆருயிரானவளே,
ஆகாயம் ஆனாய் என் வாழ்வினிலே..
இவ்வுலகம் இருளும் போதும்
என் இதயத்துடிப்பு முடிந்து
ஆன்மா பிரியும் போதும்
இனியவளே நீ வேண்டும் ..
இமயமே அடிமையாகுமடி!
உன் நட்பு கிட்டினால்...
இதயமது இனிமையாகுமடி
உன்னை நினைத்தால்...

எழுதியவர் : kk (17-Nov-13, 7:04 am)
சேர்த்தது : confidentkk
Tanglish : un natpin sugam
பார்வை : 188

மேலே