முதல் காதலின் மௌனம்

முதல் காதலின் மௌனம்
===================

பிரிவுக்கான நாட்குறித்துவிட்டு
கைச்சாத்திடுகிறோம்
பிரிவையும் உறவையும்
உறுதிப்படுத்தி..

அந்த நாளில் எல்லோருமாய் பகிர்ந்து கொண்டனர்
பிரிவை, உறவை, கண்ணீரை…
வேஷம் கலக்கப்படாத பாசத்தை
வெள்ளியன்று சொல்லாமல் சென்ற
உன்னைத்தவிர.
என்னிடமும் என்பதுதான் பிற்குறிப்பு .

என் கவிதைகளை மேடையேற்றி
முதன் முதலாய் கை தட்டல் செய்து
என் மனசின் ஓரமாய் நின்றிருந்தாய்
என் காதலையும்
ஒரு சொட்டு கண்ணீரையும் சுமந்தபடி…

அந்த கடைசிப்பார்வையில்
காதலையும் சொல்லி சென்றிருக்கலாம்
கறுத்துப்போன இன்றைய பொழுதுகளில்
நீ அழாமலிருக்க .

சோகங்களை எல்லாம் உனக்கே சொந்தமாக்கி
உன் சொந்தங்களின் பாதை வழியே
யாரோ நான் என்று
கை அசைத்துப்போகும்
உன் மனசில் ஒளிந்துகொண்டிருக்கும்
நம் காதலை
கண்டு கொள்ளும் என் கண்கள்.

இருந்தும்,

உன் மடியில் தலை வைத்து
மல்லாரப்பார்த்து
நிலாத்தொட்டு
உன் கண்ணம் தடவ
இன்னுமும் ஆசையடி கண்ணம்மா……….

எழுதியவர் : இர்பான் அஹ்மத் (26-Nov-13, 6:53 pm)
பார்வை : 116

மேலே