விடியலில் எழுந்தே விரித்திடு சிறகை
சூரியக் கதிரே
சூப்பர் தூரிகை....!
வானம் வரையுது
வண்ணமாய் என் நிழல் ...!
காலை ஜாக்கிங்கில்
காற்றும் நானும்...
கை விரல் பின்னவே
கலர்புல் மலர்கள்
பூங்குயில் பாடிட
பூட்ஸ் ஒலி மெட்டாக
புறப்பட்டு செல்லுதே
கவலையும் சிட்டாக.....
அதிகாலை எழுந்து விட்டால்
அந்த நாள் சொர்க்கமே...
ஆனந்தம் தூரமில்லை
அது நமது பக்கமே.....!!