இசை....

காற்றில் உதிரும்
இலைகளின்
மவுனம்.

பூக்களின் உதடுகளில்
வண்டுகளிடும்
முத்தம்.

பூவாய்த் திறக்கும்
மொட்டுக்களின்
ரகசிய சப்தம்.

கூட்டினை விட்டு
வெளியே வரும்
நத்தையின் நகர்வு.

பூமியின் தோள்களில்
சூரியன் எழுதும்
அதிகாலை விடியல்.

வானம் நானும்
அந்திப்பொழுதின்
மழைத் தூறல்.

பூக்களின் தலைவார
புறப்பட்டு வரும்
தென்றல்.

முதன் முதலாய்
பூமி பார்க்கும்
ஜாதிய வர்ணம் பூசப்படாத
மழலையின் அழுகுரல்...


- கவிஞர் செல்வா
காரியாபட்டி .


எழுதியவர் : கவிஞர் செல்வா (26-Jan-11, 3:00 pm)
சேர்த்தது : kavingarselvaa
Tanglish : isai
பார்வை : 421

மேலே