உன்னோடு நான்
பன்னூறு ஆண்டு காலம்
உன்னோடு நான் வாழ வேண்டும்.
ஆசை உயிர்த்த நேரம்
உன்னோடு நான் குலவ வேண்டும்.
அழியாது கொண்ட காமம்
உன்னோடு நான் கலவ வேண்டும்.
எதிர் வரும் இரவெல்லாம்
உன்னோடு நான் துயில வேண்டும்.
அன்புக்கு குழந்தை பெற்று
உன்னோடு நான் சிறக்க வேண்டும்.
பண்புடனே சேய்கள் வளர்த்து
உன்னோடு நான் உயர வேண்டும்.
புகழோடு தலைமுறை கண்டு
உன்னோடு நான் துளிர வேண்டும்.
வாழ்வோடு நன்னயம் செய்து
உன்னோடு நான் மிளிர வேண்டும்.
செழிப்போடு வாழ்க்கை கொண்டு
உன்னோடு நான் மகிழ வேண்டும்.
தென்னாடு போற்ற வாழ்ந்து
உன்னோடு நான் ... சாக வேண்டும்.
என்றே என் சிந்தைப்படி
என்னவளோடு நான் வாழ வேண்டும்.
- பக்றுளி நெடியோன்