மனிதர்கள் இன்னும் இருக்கிறார்களா

ஏழைச்சிறுவன்
தன்னுடைய
வறுமைப் போக்க...

வண்டிகள்
நிற்கும் இடங்களில்
பிச்சை எடுக்கிறான்...

இதைப்பார்த்த,

படித்த /பணம்
படைத்த முதலாளி
அந்தச்
சிறுவனை அழைத்து
பத்து ரூபாய் தருகிறார்...

ஆனால்,

படிக்காத / நல்ல
குணம் படைத்த
ஒரு தொழிலாளி
அந்தச் சிறுவனை
பள்ளியில் சேர்க்கப் பார்க்கிறார் ...

அப்போது,

சிறுவன்
சிந்திக்கிறான்..

படிப்பைப்பற்றி
தெரிந்தவர்
பணம் தருகிறார்...

படிப்பைப்பற்றி
தெரியாதவர்
படிப்பைத் தருகிறார்...

அவரிடம்
அந்தச் சிறுவன்
கேட்கிறான்..

உண்மையைச் சொல்லுங்கள்..?

நீங்கள்
நல்ல மனிதரா?

இல்லை,

மனநலம் பாதிக்கப்பட்டவரா?

என்று ஆச்சரியத்தில் கேட்கிறான் …!

எழுதியவர் : தமிழ் மகன் (15-Dec-13, 10:51 am)
பார்வை : 188

மேலே