பெரியவன் என்றும் நமக்கு குழந்தைதான்
சொந்தக் கவிதை - 5
மகன் வந்த உவகைனிலே
ஆப்பமும்கறியும் அம்மா செய்தாள்.
உவந்து உண்ணும் வேளையிலே
எண்ணத்திரையில் வண்ணமாய் தோன்றியது
சின்னக் குழந்தையாய் இருக்கைலே
தருவாய் ஓர் வாய் என்பான்அவன்
நினைத்து மகிழ்ந்த போதினிலே
அருகில் வந்தான் அவன் புதல்வன்
அம்மா உணவு அமிர்தம் என்றால்
அப்பா தருவது பேரின்பம் என்றான்
தருவீர் எனக்கு ஓர் வாய் என்றதும்
அன்புடன் ஊட்டிவிட்டான் பெரியகுழந்தைக்கு
கடல் கடந்து சென்றாலும் என்றும்
நம்குழந்தை நம் குழந்தைதான்
எத்தினை வயது அனாலும்
பெரியவன் என்றும் நமக்குகுழந்தைதான்