அன்புள்ள ரஜினிகாந்த
வறுமையிலே பிறந்தவர் வளர்ச்சிபல கண்டவர்
வாழ்க்கையின் உண்மைதனை நன்கு உணர்ந்தவர்
உன் வாழ்க்கை உன்கையில் என்னும் தத்துவத்தை
உணர்ந்து வாழ்ந்தவர் பிறர்க்கு உணர்த்தி வாழ்ந்தவர்
வாழ்க்கை என்னும் நாடகத்தில் நாடகம் நடித்தவர்
வாழ்க்கை அதன் போக்கினிலே போயிகடந்தவர்
நல்லவரின் பார்வையிலே நாளும் பட்டவர்
நலம்பலவே பெற்றுவந்து வாழ்வில் உயர்ந்தவர்
துன்பம்பல வந்தபோதும் துணிவு கொண்டவர்
தூய்மையான மனம்கொண்டு எதிலும் வென்றவர்
எளிமைக்கு இலக்கணமாய் இன்றும் வாழ்பவர்
ஈடில்லா நிம்மதிக்கு இமயம நடப்பவர் ..........
ஆட்டம்பாட்டம் எல்லாமே சினிமாவில் பதிந்திருக்கும்
அதிரவைக்கும் ஸ்டைலே அங்கே நிறைந்திருக்கும்
இல்லம் சென்ற பின்னாலே எல்லாம் அமைதிதானே
இல்லற வாழ்க்கைக்கு அவசியம் அமைதிதானே ....
உண்மையான கணவனாக பாசமுள்ள தந்தையாக
நல்லவர்கள் நாடிடும் நல்ல நண்பனாக
ரசிகர்களை மதித்திடும் மேன்மைமிகு நடிகனாக
குழந்தைகள் ரசித்திடும் ஸ்டயிலின் மண்ணாக ..........
தொண்டுள்ளம் படைத்தவரே பிறர் துண்பங்களை தீர்த்தவரே
இறையுள்ளம் அதிகம் கொண்டு இன்பத்தோடு வாழ்பவரே
இந்நாளில் வாழ்த்திடவே வயதொன்றும் எனக்கில்லை
இறைவனிடம் வேண்டுகிறேன் அவர் பல்லாண்டு வாழ்ந்திடவே