தனிக்குடித்தனம் - ஒரு பக்க கதை

தனிக்குடித்தனம் - ஒரு பக்க கதை
***************************************************
சார், நம் கம்பெனியில பெண்கள் வேலை செய்யிற பகுதிக்கு
சூப்பர்வைஸர் தேவைன்னு விளம்பரம் கொடுத்திருந்தோம்
இல்லையா? அதுக்கு அப்ளை பண்ணவங்க எல்லாருக்கும் டெஸ்ட்
வச்சு இன்டர்வியூ முடிச்சாச்சு.
-
வனஜா, கிரிஜான்னு ரெண்டு பேரு சம தகுதியோட இருக்காங்க.
அவங்கள்ல யாரை செலக்ட் பண்றதுன்னு நீங்கதான் முடிவு பண்ணனும்
சார்'' -
மானேஜிங் டைரக்டர் ராஜாவிடம், அவரது உதவியாளர் ஃபைல்களை
கொடுதார்.
-
அந்த இருவரின் சுயவிவரங்களையும், தகுதிகளையும் நோட்டம் விட்ட
ராஜா, ''கல்யாணமான இவங்க ரெண்டு பேர்ல யார் கூட்டுக்குடும்பம்,
யார் தனிக்குடுத்தனும்னு விசாரிக்கச் சொல்லுங்க'' என்றார்.
-
சற்று நேரத்தில் அறைக்கு வந்த உதவியாளர், ''எல்லாம் விசாரிச்சுட்டேன்
சார்...கிரிஜா மேடம் கூட்டுக் குடும்பமா இருக்காங்க. வனஜா மேடம்
தனிக்குடித்தன்ம்' என்றார் உதவியாளர்.
-
அப்ப வனஜாவுக்கே அப்பாயின்மென்ட் ஆர்டர் கொடுத்துடுங்க'' என்று
உத்தரவிட்ட எம்.டி.யை கேள்விக்குறியுடன் பார்த்தார் உதவியாளர்.
-
கூட்டுக் குடும்பத்துல 'பெரியவங்க பார்த்துப்பாங்க'ன்னு பெண்கள் சில
விஷயங்கள்ல அசட்டையா இருப்பாங்க. ஆனா, தனிக் குடுத்தனும்னா
எல்லா குடும்ப விஷங்களையும் மேனேஜ் பண்ணியே ஆகணும்.
அவங்களுக்கு நிர்வாகத் திறமையும்,
அதிக பொறுப்புணர்ச்சியும் வளர்ந்திருக்கும். என் கணக்கு சரிதானே?''
என்றார் ராஜா.
-
புன்னகையால் ''எஸ்' சொல்லிக் கிளம்பினார் உதவியிளார்.
-
-----------------------------
>எஸ்.ராமன்

எழுதியவர் : எஸ்.ராமன் (20-Dec-13, 8:51 pm)
பார்வை : 162

மேலே