விடியலை தேடி

ஆடவர்க் குல தர்மமும் சாஸ்திரமும்
மாற்று மதங்களின் வேதங்களும்
சிறுமைபடுத்திய காலத்தே.....!

மார்தட்டி எழுந்த மனவெழுச்சியின்
உன்னத அடையாளம் இவள்!!
அடிமை பாராட்டிய ஆண்களுக்கு
மனிதம் புரிய அடுப்படி தாண்டி
விண்வெளியில் கால் பதித்தவள்!!

அமுதுக்கொர் ஒவ்வை!
அன்பிற்கோர் அன்னை தெரசா!
வீரத்தில் ஜான்சி ராணிபோல்!
விவேகத்தில் இந்திரா காந்தியை போல்!
சாபக்கேடுகளை சருகாய் சிதறடித்து
சரித்திரம் படைக்க துணிந்தவள்!!

போரட்டங்கள் பழக்கப்பட்டவை தான்
தோல்விகள் இவள் தோழிகள் - எனினும்
துவண்டதில்லை! - இவள்
முயற்சிகள் முடங்கியதில்லை!
நாட்டின் கண்கள் என்பதில் என்ன பெருமை?
முதுகெலும்பு என்பதே பெருமகிழ்ச்சி!

மக்களவையில் இடஒதுக்கீடு கேட்டு நின்றபோதும்!
மனிதாபமற்ற மாக்களை கண்டித்த போதும் !
மகளிர் குழு அமைத்தபோதும் !
மங்கையவள் துயரம் தீரவில்லை!!

பெண்ணே
துணிந்த மனதிற்கு தென்பொதிகையும் தண்ணீர்!
பாரம் சுமந்தவளுக்கு பனிமலையும் பன்னீர்!
செந்தாமரை போல் சேற்றுக்குள் சிதைந்துவிடாதே!
சூரியன் போல சுட்டெரி!
தைரியம் அணிய செய்!
பெண்மை உன்னை போற்றும்!
கண்ணியம் மிக்க பெண்ணியம் - உன்
கம்பீரத்தை பறைசாற்றும்!

எழுதியவர் : சௌம்யா தினேஷ் (28-Dec-13, 2:50 pm)
பார்வை : 426

மேலே