சொல்லாமல் சொன்ன

துள்ளும் மீன்களில்
உன் விழிகளை
கயல் என்பேன்
தொட்டுத் தழுவி
செல்லும் காற்றிலுனை
தென்றல் என்பேன்
அள்ளி நான் அணைத்திட
துள்ளி ஓடி வரும் நீ
அழகு நீரோடை என்பேன்
அந்தச் செவ்விதழ்கள்
இரண்டை மட்டும்
தேனோடை என்பேன்
சொல்லும் வார்த்தைகள்
எல்லாம்
செந்தமிழ் பாடல் என்பேன்
சொல்லாத அந்த மௌனத்தை
காதல் என்பேன்
சொல்லாமல் சொன்ன
கவிதை என்பேன்
என்னுள் கவிந்த
மாலை என்பேன்
-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (4-Jan-14, 9:59 pm)
Tanglish : sollaamal sonna
பார்வை : 427

மேலே